Thursday 26 January 2012

என்றும் மறையாது தமிழிசை

கம்ப்யூட்டரையே நம்பி, நான்கைந்து ராகங்களையே தெரிந்துகொண்டு வருடத்திற்கு ஒரு படம் இசைஅமைத்து வானலாவிய புகழை அடைந்த‌ இசையமைப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஏனோ இவர்களது பாடல்களை மீண்டும் ஒரு முறை கேட்க தோன்றுவதே இல்லை வார்த்தைகளும் புரிவதே இல்லை. 

தமிழ்...... கொலைவெறி என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது திரு. இளையராஜாவின் இசையில் ஒரு வருடத்திற்குள் ஐந்து படங்க‌ள் வரை வெளிவந்து இருகின்றன. அனைத்து படங்களின் பாடல்களும் ஒன்றையொன்று தழுவாமலும் தமிழ் வார்தைகள் புரியும்படியும் மனித வாத்திய கருவிகளுடன் உரிய ஆண்குரல் பெண்குரலில் இணைந்து பல இசை நுணுக்கங்களை கொண்டு இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இசையால் தமிழை திக்கெட்டும் பரவச்செய்த இவர் இசைராஜா மட்டுமல்லாது தமிழ்ராஜாவும் அவரே தான். 

மயில்வாகனா

No comments:

Post a Comment