அன்று விநோதமான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரசுதரப்பு வழக்குரைஞர் குற்றவாளிகளை விசாரித்துகொண்டிருந்தார்.முதல் குற்றவாளியாக காவல்துறையால் சொல்லப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஐயா நான் மரம் வெட்ட கூலி பேசி அந்த வீட்டிற்கு ஆள் அனுப்பினேன். ஆனால் அவரோ வேறு நால்வரை அங்கு அனுப்பி, அந்த வீட்டு மரத்தை வெட்டாமல் அந்த வீட்டில் உள்ள நபரையே வெட்டி கொன்றுவிட்டனர். ஐயா , அந்த செயலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றான்.
கொலை செயலில் குற்றவாளிகளாக சொல்லப்படும் அந்த நால்வரையும் உங்களுககு முன்பே தெரிந்தவர்களா? என்று வழக்குரைஞர் முதல் குற்றவாளியை கேட்டார், தெரியது ஐயா என்றான், சரி நீங்கள் போகலம் என்றர்.
அந்த நால்வரும் குற்றவாளி கூண்டிற்க்கு அழைக்கப்பட்டனர்.
விசாரணை துவங்கலாயிற்று, உங்கள் மீது உள்ள கொலை குற்றம் ஆதாரத்துடன் காவல்துறையினரால் நிருபிக்கப்பட்டுள்ளது.உங்களுக்கும், கொலை செய்யப்பட்டு இறந்த நபருக்கும் எந்த முன் விரோதமும் சண்டையோ ஏதும் இல்லை என்பதையும் தாங்களே இந்த நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டீர்கள். குற்றவாளி A1 உங்களுக்கு பணம் கொடுத்து அநத வீட்டு நபரை திட்டமிட்டு உங்கள் வழியாக இந்த கொலை செயலை அரங்கேற்றி இருக்கின்றார் என்பதும் தெளிவாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
முதல் குற்றவாளியாக சொல்லப்படுவருக்கும் இந்த கொலைக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது. அவர் மரத்தை வெட்டத்தான் ஆள் அனுப்பினார் . அதிலும் அவர் நேரிடியாக மரத்தை வெட்ட கூலி பேசி அனுப்பிய அந்த நபர் செல்லாமல் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவர் தன் கொண்ட பழியை தீர்பதர்க்காக இந்த நால்வரையும் A1 குற்றவாளி அமர்த்தி திடிரென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி அந்த வீட்டு நபரை கொன்று விட்டனர்.
எனவே முதல் குற்றவாளி என சொல்லப்படும் நபருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் நீதியரசரை கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில சம்பந்தம் இல்லத நபர்களை இப்படி கூலிக்கு அமர்த்தி, இவர்களுக்கு , சம்மந்தமே இல்லத நபர்களை கொலை செய்ய பணம் கொடுத்து இவர்களை அனுப்பிய A1 குற்றவாளிக்கு மரணதண்டனை , அதாவது சாகும் வரைதூக்கில வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் பணத்திற்காக கொலையும் செய்யலாம், எளிதில் தண்டனையில் இருந்தும் வெளியில் வந்துவிடலாம், என்று நினைத்துமுன் பின் தெரியாத நபர்களை பணத்திற்க்காக மட்டுமே கொலை செய்யும் இந்த கொலைகார கூட்டம் சட்டத்தையும், சமுக நீதியும், அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் அழித்து வருகிறது. எனவே மனித இனத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் அச்சுறுத்தலாக வாழும் இவர்களுக்கு மாண்புமிகு நீதயரசர் அதிகபட்ச தண்டணை மரணதண்டனை வழங்கி இந்த மனித இனத்தை இந்த கொலைகார கூட்டத்திடமிருந்து காத்தருளுமாறு மிக பணிவன்புடன கேட்டுக்கொள்கின்றேன்.
மாண்புமிகு நீதியரசர் வழங்கிடும் ஞாயமான தீர்ப்பால் இது போன்ற கொலையில் இருந்து அழியமல் இந்த மனித இனம் காக்கப்படுவது உறுதி என்று கூறி அரசு வழக்குரைஞர் அமர்ந்தார்.
மயில்வாகனா
No comments:
Post a Comment