Monday 20 February 2012

கொலுசு சத்தம்

ஒரு சிறிய கிராமம் அதில் தந்தையும் வாலிப  மகனும் வாழ்ந்து வந்தனர்,  அவருக்கு பாம்பு பிடித்து மக்கள் கூடும் இடங்களில் வித்தைகாட்டி அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார், அவருட்ன காட்டிற்கு செல்லுவது, பாம்பை பிடிக்க உதவுவது அவர் முன்னிலையில் பாம்பை பிடிப்பது அவருக்கு ஒரு பணிவான மகனாக வாழ்நது வந்தான்



அன்று அவர்கள் வீடு திரும்பும் போது ஒரு பெரிய நாகத்தை இருவருமே பார்த்தார்கள், அதைப் பற்றி தந்தை எதுவுமே பேசாமல் வந்துகொண்டு இருந்தார்,

அப்பா ,,, அந்த பாம்பு பற்றி எதுவும் பேசவிலையே என்றான்,

இது அவர் எதிர்பார்த்தது தான் என்றாலும் அதை அவர் விரும்பாதவராகவே இரு்நதார், என்றாலும் மகனே நீ இப்போது பார்த்த நாகம்  ஒரு சாதாரண நாகம் அல்லவே, இது ஒரு ராஜநாகம், இதை பிடிப்பதும் சுலபமானதல்ல, நான் பல வித கடுமையான  விரதங்கள்  மனக்கட்டுபாடு பயிற்சிகள் அனுபவ்ஙகள் கொண்டு இந்த தொழிலை செய்து வருகின்றேன், மேலும் நான் பாம்புகளை திரும்பவும் கட்டிலேயே விட்டுவவிடுவதும் நீ அறிந்ததே, இதை பிடிக்கும் அளவிற்கு உனக்கு அனுபவம் இல்லை மகனே அதனால் தான் அமைதியாக இருந்தேன் என்றார்

அன்று இரவு முழுதும் அவனால தூங்க முடியவிலலை, நாம் இவ்வளவு நாளாக தந்தையுடன் இருந்தும நம் மீது நம்பிக்கை ஏற்படவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டான், எப்படியாவது நாளை அந்த பாம்பைபிடித்து தந்தையிடம் திறமையானவன் என்று பெயர்வாங்கியே ஆகவேண்டும் என்ற எண்ணத்திலேயே தூங்கிப்போனான்.

விடியும் முன்பே வீட்டை விட்டு கிளம்பி போய்விடடான், தந்தை மகனைக் காணாமல் தவித்துக்கொண்டிருந்தார்,

அது ஒரு குறுகலான தெரு, அங்கே ஒரு கூட்டம் ஆரவாரத்துடன் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது,  நடுவில் அவன் அந்த ராஜநாகத்தை சாதாரணமாக தன் மகுடிக்குள் கட்டுபடுத்தி ஆடவைத்துக்கொண்டிருந்தான்,

பாம்பு மிகவும் கருப்பாக மதிய வெயிலில் உயரமாக ஆக்ரோக்ஷமாக தலையை
அங்குமிங்கும் திருப்பி ஆடிக்கொண்டிருந்தது, அனைவரும் பயத்தில் ஆழ்த்தியிருந்தது, தந்தையும் செய்தி கேட்டு கவலையுடன் அலங்கமலங்க கூட்டதை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல ஒரு கொலுசொலியும் அந்த கூட்ட சத்ததிலும் தவழ்ந்து வந்தது,,  மகுடிக்கும் மீறிய அந்த கொலுசு சத்தம் மகுடிவாசிக்கும் அவனுக்குள்ளும் ஒரு இனிய அதிர்ச்சியை  நெஞ்சுக்குள்ளும் அள்ளி வீசியது,

ஒரு கணம் ஒலி வந்த திக்கை நோக்கினான், அழகிய மையிட்ட கருவிழிகள் அவனை மாடத்திலிருந்து ஒரு கணம் திணரடித்தன,

அம்மாவென்று அலறி தரையில சாய்ந்தான், மகனே என்று தந்தையும் அலறினார், கடுநாகம் கடுமையாக அவனை தீண்டி  இருந்தது, மயக்க நிலையிலே தந்தை முகத்தைப்பார்த்து கண்கலங்கினான், மகனே இப்படி வீழ்ந்துவிட்டாயே , அப்பா  ,,,, நான் பிழைக்கமாட்டேன என்னை மன்னிததுவிடு்ஙகள் என்றான்,

ராஜநாகம் மிகவும் விஷமுள்ளது, கட்டுப்படுத்த முடியாதது, வேண்டாம் என்று சொன்னேன் இப்படி உன்னை தீண்டிவிட்டதே என்று அழுதார்,

அப்பா என்னை பாம்பு தீண்டும் முன்பே ராஜநாகத்தை விட விஷமுள்ள ஒரு கன்னிபாம்பு தீண்டி விட்டது என்ற போதே உயிர் பிரிந்திருந்தது.


மயில்வாகனா

No comments:

Post a Comment